24 மணி நேரத்தில் அண்ணாமலை தனது குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்.. இல்லையென்றால் நடவடிக்கை பாயும்.. அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை


24 மணி நேரத்தில் அண்ணாமலை தனது குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்.. இல்லையென்றால் நடவடிக்கை பாயும்.. அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை


பிஜிஆர் நிறுவனத்தில்திமுகஅரசு முதலீடு செய்துள்ளதாக அண்ணாமலைகுற்றம்சாட்டியுள்ளார். 24 மணி நேரத்தில் அவர் இந்த குற்றச்சாட்டை தெளிவு படுத்த வேண்டும். இல்லையென்றால் சட்டரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு ஏற்படும் என்பதால் அனைவரும் ஜெனரேட்டர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கத்திற்காக, ரூ.355 கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமான பி.ஜி.ஆர். எனர்ஜியிடம், முறைகேடாக ரூ.4,472 கோடி மதிப்பில் மீண்டும் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எண்ணுர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார். புரிதல் இல்லாமல் பொதுவெளியில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அரைகுறையாக அத்திட்டம் குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஆடுதுறை பேரூராட்சிக்கான மறைமுகத் தேர்தலை சுதந்திரமாக நடத்த பாதுகாப்பு வழங்குங்கள்- காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் 5/9/2006 அன்று தொடங்கியது. ஏறத்தாழ 10 ஆண்டுகள் இத்திட்டங்கள் முடிவு பெறாமல் அதிமுக ஆட்சியில் விடப்பட்டிருந்தன. வைப்புத்தொகை 10%  ஆனால் அதை குறைத்து தமிழக அரசு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சலுகை காட்டியது போல அண்ணாமலை பேசியுள்ளார். ஒன்றிய அரசு வைப்பு நிதியை 3% ஆக குறிப்பிட்டு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

2019 இல் அதிமுக ஆட்சியில் தான் பிஜிஆர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அனைத்தையும் சரிபார்த்து தானே ஒப்பந்தம் போட்டார்கள். அவர்கள் சரியான நிறுவனமா இல்லையா என்று பார்க்க வேண்டியது யார் பொறுப்பு?  2019ல் அதிமுக ஆட்சியில் என்ன மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டதோ அதே மதிப்பீட்டிற்கு தான் பிஜிஆர் நிறுவனத்திற்கு தற்போது கொடுக்கப்பட்டுள்ளது.

முழு விவரத்தை தெரிந்து கொண்டு புரிந்து கொண்டு கருத்துகளை சொல்ல வேண்டும். அவர்களுக்கு புரிய புத்தி இல்லை என்றால் புரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியிடமும், முன்னாள் அமைச்சர் தங்கமணியிடமும் கேட்க வேண்டிய கேள்விகளை அண்ணாமலை இப்போது வைத்துள்ளார்.

பிஜிஆர் நிறுவனத்தில் திமுக அரசு முதலீடு செய்துள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 24 மணி நேரத்தில் அவர் இந்த குற்றச்சாட்டை தெளிவு படுத்த வேண்டும். இல்லையென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

Must Read : மிஸ் கூவாகம் போட்டியை இந்த ஆண்டுமுதல் உளுந்தூர்பேட்டையில் நடத்த கோரிக்கை

விரைவில் மின்வெட்டு ஏற்படும் ஜெனரேட்டர் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்  என்று அண்ணாமலை சொல்லியுள்ளார். நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்ட போது தமிழகத்தில் ஒரு நொடி கூட மின்வெட்டு ஏற்படாமல் சீரான மின் விநியோகம் கொடுக்கப்பட்டது.  கடந்த மானிய கோரிக்கை அடிப்படையில் இன்று காலை கூட 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. அவர் கூறியது போல ஜெனரேட்டர் வாங்கும் நிலை வராது.

அண்ணாமலைக்கு பக்குவம் வேண்டும். பக்குவம் இல்லை என்றால் பக்குவத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எங்கு தவறு நடந்தாலும் முதல்வர் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார். உங்கள் உருட்டால் மிரட்டல்களுக்கு பயப்படும் ஆட்சியல்ல திமுக ஆட்சி. இத்தோடு அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.  அண்ணாமலை தான் கூறியதை நிரூபிக்க வேண்டும் இல்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் 75,000 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

பாக்கியலட்சுமி ப்ரோமோ அதிர்ச்சி பெரிய திருப்பம் - ஏப்ரல் முதல் ஏப்ரல் வரை இன்று எபிசோட் முன்னோட்டம்638832644