வேலூர் கோட்டையில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொமை... இருவருக்கு ஆயுள் தண்டனை!



வேலூர் அடுக்கம்பாறையை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண், 2020-ம் ஆண்டு வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் வேலை செய்து வந்தார். அதே கடையில் பணிபுரிந்துவந்த தன்னைவிட 4 வயது குறைவான காட்பாடியைச் சேர்ந்த இளைஞருடன் அந்தப் பெண்ணுக்குப் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்துவந்தனர். 18.01.2020 அன்று இரவு 9.30 மணியளவில், பணியை முடித்துவிட்டு இரண்டு பேரும் வேலூர் கோட்டை பூங்காவுக்குச் சென்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான பகுதியில் தனிமையில் இருந்தபோது, கஞ்சா போதையில் அங்கு வந்த 3 பேர், கழுத்தில் கத்தியை வைத்து இளம்பெண்ணின் தங்கக் கம்மலைப் பறித்தனர். இதையடுத்து, இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு மூன்று பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

Comments

Popular posts from this blog

பாக்கியலட்சுமி ப்ரோமோ அதிர்ச்சி பெரிய திருப்பம் - ஏப்ரல் முதல் ஏப்ரல் வரை இன்று எபிசோட் முன்னோட்டம்638832644